கோவில்பட்டி இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாலத்தில் கணேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த பொழுது எதிரே வந்த ஆட்டோவில் மோதி நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அதே ஆட்டோவில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.