தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி நேரு நகரைச் சேர்ந்தவர் முத்து இவருடைய மகன் முத்துரா, திரேஸ்புரம் பகுதியில் மீன் பிடித்தல் மற்றும் சங்கு குளி தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் தனியாக இருந்த முத்துரா திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.