தர்மபுரிமாவட்டம், காரிமங்கலம் தாலுக்கா பெரியாம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள் +2 படிப்பை பாதியிலேயே கைவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தியதில் சிறுமி 4 மாத கர்ப்பமானார். இதுகுறித்து போக்சோ வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.