வேடசந்தூர் அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் உள்ளனர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தனது அக்காவை பார்ப்பதற்காக புளியமரத்து கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.