அரியலூர் மாவட்டம் தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அரியலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ராஜேஷ் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர் அணிந்திருந்த 02 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க செயின் மற்றும் ஆண்ட்ராய்டு போனை உறவினரிடம் ஒப்படைத்தனர்.