சிவகங்கை மாவட்டத்தில் மாட்டினங்களுக்கு தோல் கழலை நோய் (Lumpy Skin Disease) வராமல் தடுக்கும் பொருட்டு செப்டம்பர் 3 முதல் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 57 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.