முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் பணியினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அரியலூர் திருச்சி சாலையிலுள்ள தூயமேரி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.