தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வரும் 6-வது புத்தக திருவிழாவையொட்டி தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம் விளக்கும் புகைப்பட கண்காட்சி கனிமொழி எம்பி திறந்துவைத்தார். தொடர்ந்து புத்தக திருவிழாவை காண வந்த மாணவ - மாணவிகளோடு கலந்துரையாடினார். இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.