அரியலூர் மாவட்டம் இறவாங்குடி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டனர். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர். மேலும் அடிப்படைத் தேவைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினர். இதனையடுத்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய தீர்வு காண அறிவுறுத்தல்.