குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி கிராமம் நரிமேடு புதூர் அருகே திண்டுக்கல் குஜிலியம்பாறை நெடுஞ்சாலை ஓரத்தில் காட்டுப்பகுதியில் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை இட்ட பொழுது அருகிலேயே பிராந்தி பாட்டிலும் மருந்து பாட்டிலும் இருந்ததை கண்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் இறந்த இளைஞர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.