தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் இன்று சனிக்கிழமை என்பதால் கரை திரும்பின. கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக கரை திரும்பிய படகுகளில் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.