நல்லமனார்கோட்டை பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் டவுசர் அணிந்து முகத்தை கர்சிபால் மறைத்து வந்த 2 கொள்ளையர்கள் சிவானந்தன் வீட்டில் ரூ.9 ஆயிரம் பணம் கொள்ளை அடித்து தொடர்ச்சியாக செல்லம்மாள், சரவணன் உள்ளிட்ட 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளையை தடுக்க சென்ற பெண் ஒருவருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டது தொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் DSP.பவித்ரா அமைத்த தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.