தஞ்சாவூர் பெரிய கோயில் நவராத்திரி கலை விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மண்டபத்தில் நடந்த கலை நிகழ்ச்சி கண்டு ரசித்தனர்.