தூத்துக்குடி ஜாா்ஜ் ரோடு, காந்தி நகா் மீனவா் காலனியைச் சோ்ந்த அண்டோ மகன் ஜெகதீஷ் (40) தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா், செப். 19ஆம் தேதி இரவு தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு, உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற தோணியில் 12 பேருடன் சென்றுள்ளாா்.