அரியலூர் மாவட்டம் ஆயிப்பாளையம் கிராமத்தில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது. பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக 96 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.