கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வ உ சி பிறந்த அவரது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவசிலைக்கு திமுக சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.