தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரை திரும்பின. இதன் காரணமாக மீன்பிடி துறைமுக மீன்கள் விற்பனை செய்யும் ஏல கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.