உலக பிசியோதெரபி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட இந்திய பிசியோதெரபி அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்காவில் அமைந்துள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு 15 நிமிடங்கள் இடைவிடாது இந்த மைதானத்தை சுற்றி வந்தனர்.