தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், புலிக்கரை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துணை ஆட்சியர் அசோக்குமார் தலைமையில் நடந்தது.புலிக்கரை, செல்லியம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.