தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜெகன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் கிளாடிஸ், பரிமளம் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் கடந்த ஒன்றாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் நாட்டுப்படகில் வைத்து படகின் டிரைவர் கிலாடிஸ் மற்றும் பரிமளம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதில் பரிமளம் டிரைவர் கிளாடிசை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் கிளாடிஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.